குழந்தைகளின் ஊட்டத்தைச் சத்து வளர்ச்சிக்கு பாட்டி கை பக்கு ஸ்நாக்ஸ் ரெசிபி!

வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகவும் அத்தியாச தேவைகளில் ஒன்று. அதுவும் சரியான விகிதத்தில் உணவு முறைகளை கொடுப்பதன் மூலமாக மட்டுமே உடலுக்கு தேவையான அனைத்து வித நியூட்ரியன்ட்ஸ்களும் கிடைத்து குழந்தைகள் நல்ல வளர்ச்சி அடைய முடியும். இந்த முறை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகையை சத்து நிறைந்ததாக மாற்றுவதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாங்க சத்து நிறைந்த பாசிப்பயிறு புட்டு செய்வதற்கான விளக்கம் இதில் உள்ளது…

ஒரு கப் பாசிப்பருப்பை ஒரு கடாயில் சேர்த்து லேசாக படுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு சற்று நிறம் மாறி வாசனை வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து தனியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த பருப்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பாசிப்பருப்பு நன்கு ஊறியதும் ஒரு மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு மையாக அரைக்காமல் சற்று பரபரப்பாக அரைத்துக் கொள்ளலாம். மாவு அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் தெளித்து அரைக்க வேண்டும் தாராளமாக தண்ணீர் சேர்க்கக்கூடாது.

இப்பொழுது இந்த மாவை இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் சேர்த்து பத்து முதல் 15 நிமிடம் நன்கு நீராவியில் வேக வைக்க வேண்டும். இட்லி நன்கு வெந்து சூடு குறைந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளலாம்.

அதன் பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவுகளாக பொடி செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் தாராளமாக மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து கைப்பிடி அளவு முந்திரி, கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

தள்ளுவண்டி கடை கார தக்காளி சட்னி செய்யலாமா! ரெசிபி இதோ…

தேங்காவின் நிறம் மாறியதும் கால் கப் நாட்டு சக்கரை, பொடி செய்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு, அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு புட்டு தயார்.
குழந்தைகளுக்கு இது போன்ற ஹெல்த்தியான உணவு வகைகள் கொடுக்கும் பொழுது விரும்பி சாப்பிட்டு நல்ல வளர்ச்சியை பெற முடியும்.

Exit mobile version