மதுரை ஸ்பெஷல் கருப்பட்டி பருத்திப்பால் வைத்து அல்வா ரெசிபி!

மதுரையில் பலவிதமான உணவு ரெசிபிகள் சிறப்பாக இருந்தாலும் பருத்தி பாலுக்கு தனி மவுசுதான். சுவை மாறாமல் இன்றும் பலரின் மனதில் அப்படியே நிலைத்து இருக்கிறது பருத்தி பாலில் அசல் சுவை. இந்த முறை கருப்பட்டி பருத்திப்பால் வைத்து அருமையான அல்வா செய்வதற்கான விளக்கத்தை எளிமையான முறையில் பார்க்கலாம் வாங்க…

இந்த அல்வா செய்வதற்கு முதலில் ஒரு கப் பருத்தி கொட்டையை 8 மணி நேரம் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 8 மணி நேரம் கழித்து இதனுடன் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது இரண்டு கப் அளவு வரும் அளவிற்கு கெட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுத்த பாலை அடிகனமான ஒரு கடாயில் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதனுடன் கால் கப் அளவிற்கு கெட்டியான பசும்பால் சேர்த்து கலந்து கொள்ளலாம். அதாவது பசும்பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதன் பின் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு கப் பருத்தி பால் இருக்கு ஒரு கப் அளவு கருப்பட்டி என்பது இனிப்பிற்கான அளவு. அதன்படி ஒரு கப் கருப்பட்டி பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம். கருப்பட்டி சேர்த்த பிறகு மிதமான தீயில் கலந்து கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். அதாவது குறைந்தது 10 முதல் 15 நிமிடம் கலந்து கொடுக்க வேண்டும்.

சாதம் மற்றும் தோசைக்கு கச்சிதமாக பொருந்தும் தக்காளி வைத்து அருமையான புளிக்குழம்பு!

15 நிமிடம் கழித்து இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி மீண்டும் ஒரு பத்து நிமிடம் கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக பருத்திப்பால் கெட்டிப் பதத்திற்கு அடைந்து அல்வா போல திரண்டு வரவேண்டும். இறுதியாக கடாயில் ஒட்டாமல் அல்வா திரண்டு வந்தால் தயாராக மாறிவிட்டது.

இந்த நேரத்தில் கைப்பிடி அளவு முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான பருத்திப்பால் கருப்பட்டி அல்வா தயார்.

Exit mobile version